திருக்குறள்களை பள்ளியில் மனப்பாட செய்யுளாக மட்டுமே படித்ததுண்டு, அதனால் அதை பொருள் பொதிந்து படித்தது கிடையாது. சமீபத்தில் எனது பழைய திருக்குறள் புத்தகம் கிடைத்தது, இப்போது அதை படித்தபோது நமது இயல்பு வாழ்க்கையோடு பொருத்தி பார்த்த போது தற்காலத்திருக்கு மட்டும் அல்ல எக்காலத்துக்கும் பொருந்துவதை காண முடிகிறது.
திருக்குறள் யாவுமே சிறந்ததுதான் என்றாலும், அதில் மிக சிறந்ததாக நான் கருதும் சில அறத்துப்பால் குறள்களை இங்கே பதிவு செய்துள்ளேன்.
சில மிகச்சிறந்த குரல்கள் என்று நீங்கள் நினைத்தது இங்கே இடம் பெறவில்லை எனில், கீழ் குறிப்பிட்டுள்ள தன்மையால் அவை விடுபட்டிருக்கலாம்.
1 . நன்றாக ஏற்கனவே அறிந்த குறள்களை நான் இங்கு பட்டியல் இடவில்லை.
2 . குறை கூறும் குறள்களை தவிர்த்துள்ளேன்.
3 . நெகடிவ் அக முடியும் குறள்களையும் தவிர்த்துள்ளேன்.
அறத்துப்பால்
அதிகாரம் : ஊழ்
எண் : 380
பரியினும் ஆகாவாம் , பால் அல்ல; உய்த்துச்
சொரியினும் போகா , தம.
மு.வரதராசனார் உரை :
எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித் துன்பத்தை உண்டாக்கும் வித்து அவா (ஆசை) என்று கூறுவர்.
எண் : 380
பரியினும் ஆகாவாம் , பால் அல்ல; உய்த்துச்
சொரியினும் போகா , தம.
மு.வரதராசனார் உரை :
எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித் துன்பத்தை உண்டாக்கும் வித்து அவா (ஆசை) என்று கூறுவர்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
அதிகாரம் : இல்வாழ்க்கை
எண் : 50
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
கலைஞர் உரை :
தெய்வத்துக்கென எத்தனையோ அருங்குணங்கள் கூறப்படுகின்றன.
உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில்
வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து
மதிக்கப்படுவான்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
அதிகாரம் : மக்கட்பேறு
எண் : 64
பணிவுஉடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணி அல்ல, மற்றுப் பிற
எண் : 64
பணிவுஉடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணி அல்ல, மற்றுப் பிற
கலைஞர் உரை :
சிறந்த பொருளை அமிழ்தம் எனக் குறிப்பிட்டாலுங் கூடத் தம்முடைய
குழந்தைகளின் பிஞ்சுக்கரத்தால் அளாவப்பட்ட கூழ் அந்த
அமிழ்தத்தைவிடச் சுவையான தாகிவிடுகிறது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
அதிகாரம் :
விருந்து ஓம்பல்
எண் : 85
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி ,
மிச்சில் மிசைவான் புலம் ?.
மு.வரதராசனார் உரை :
விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ ?.
எண் : 85
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி ,
மிச்சில் மிசைவான் புலம் ?.
மு.வரதராசனார் உரை :
விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ ?.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
அதிகாரம் : இனியவை
கூறல்
எண் : 95
பணிவு உடையன் , இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணிஅல்ல மற்றுப் பிற.
மு.வரதராசனார் உரை :
தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறர் தனக்குச் செய்த உதவிக்கு மண்ணுலகையும் விண்ணுலகையும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.
எண் : 95
பணிவு உடையன் , இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணிஅல்ல மற்றுப் பிற.
மு.வரதராசனார் உரை :
தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறர் தனக்குச் செய்த உதவிக்கு மண்ணுலகையும் விண்ணுலகையும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
அதிகாரம் : பொறை உடைமை
எண் : 156
ஒறுத்தார்க் கொருநாளை யின்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்
கலைஞர் உரை :
தமக்குக் கேடு செய்தவரை மன்னித்திடாமல் தண்டிப்பவர்க்கு அந்த
ஒருநாள் மட்டுமே இன்பமாக அமையும். மறப்போம் மன்னிப்போம் எனப்
பொறுமை கடைப் பிடிப்போருக்கோ , வாழ்நாள் முழுதும் புகழ்மிக்கதாக
அமையும்.
எண் : 156
ஒறுத்தார்க் கொருநாளை யின்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்
கலைஞர் உரை :
தமக்குக் கேடு செய்தவரை மன்னித்திடாமல் தண்டிப்பவர்க்கு அந்த
ஒருநாள் மட்டுமே இன்பமாக அமையும். மறப்போம் மன்னிப்போம் எனப்
பொறுமை கடைப் பிடிப்போருக்கோ , வாழ்நாள் முழுதும் புகழ்மிக்கதாக
அமையும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
அதிகாரம் : பயன்இல
சொல்லாமை
எண் : 200
சொல்லுக , சொல்லில் பயன் உடைய சொல்லற்க,
சொல்லில் பயன் இலாச் சொல்
மு.வரதராசனார் உரை :
சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்லவேண்டும் ; பயன் இல்லாதவைகளாகிய சொற்களைச் சொல்லவேகூடாது.
எண் : 200
சொல்லுக , சொல்லில் பயன் உடைய சொல்லற்க,
சொல்லில் பயன் இலாச் சொல்
மு.வரதராசனார் உரை :
சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்லவேண்டும் ; பயன் இல்லாதவைகளாகிய சொற்களைச் சொல்லவேகூடாது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
அதிகாரம் :
ஒப்புரவு அறிதல்
எண் : 211
கைம்மாறு வேண்டா கடப்பாடு ; மாரிமாட்டு
என்ஆற்றும் கொல்லோ , உலகு?
மு.வரதராசனார் உரை :
இந்த உலகத்தார் தமக்கு உதவும் மழைக்கு என்ன கைம்மாறு செய்கின்றனர் ? மழை போன்றவர் செய்யும் உதவிகளும் கைம்மாறு வேண்டாதவை.
எண் : 211
கைம்மாறு வேண்டா கடப்பாடு ; மாரிமாட்டு
என்ஆற்றும் கொல்லோ , உலகு?
மு.வரதராசனார் உரை :
இந்த உலகத்தார் தமக்கு உதவும் மழைக்கு என்ன கைம்மாறு செய்கின்றனர் ? மழை போன்றவர் செய்யும் உதவிகளும் கைம்மாறு வேண்டாதவை.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
அதிகாரம் :
ஒப்புரவு அறிதல்
எண் : 216
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால்-செல்வம்
நயன் உடையான்கண் படின்
கலைஞர் உரை :
ஈர நெஞ்சம் கொண்டவனிடம் செல்வம் சேருமேயானால் அது, ஊரின் நடுவே செழித்து வளர்ந்த மரம், பழுத்துக் குலுங்குவது போல எல்லோர்க்கும் பயன்படுவதாகும்.
எண் : 216
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால்-செல்வம்
நயன் உடையான்கண் படின்
கலைஞர் உரை :
ஈர நெஞ்சம் கொண்டவனிடம் செல்வம் சேருமேயானால் அது, ஊரின் நடுவே செழித்து வளர்ந்த மரம், பழுத்துக் குலுங்குவது போல எல்லோர்க்கும் பயன்படுவதாகும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
அதிகாரம் :
ஒப்புரவு அறிதல்
எண் : 220
ஒப்புரவி னான்வருங் கேடெனின் னஃதொருவன்
விற்றுக்கோட் டக்க துடைத்து
மு.வரதராசனார் உரை :
சாவதைவிடத் துன்பமானது வேறொன்றும் இல்லை. ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாத நிலை வந்தபோது அச்சாதலும் இனியதே ஆகும்.
எண் : 220
ஒப்புரவி னான்வருங் கேடெனின் னஃதொருவன்
விற்றுக்கோட் டக்க துடைத்து
மு.வரதராசனார் உரை :
சாவதைவிடத் துன்பமானது வேறொன்றும் இல்லை. ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாத நிலை வந்தபோது அச்சாதலும் இனியதே ஆகும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
அதிகாரம் : புகழ்
எண் : 231
ஈதல்! இசைபட வாழ்தல்! அது அல்லது
ஊதியம் இல்லை , உயிர்க்கு
மு.வரதராசனார் உரை :
வறியவர்க்கு ஈதல் வேண்டும். அதனால் புகழ் உண்டாக வாழவேண்டும். அப்புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை.
எண் : 231
ஈதல்! இசைபட வாழ்தல்! அது அல்லது
ஊதியம் இல்லை , உயிர்க்கு
மு.வரதராசனார் உரை :
வறியவர்க்கு ஈதல் வேண்டும். அதனால் புகழ் உண்டாக வாழவேண்டும். அப்புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
அதிகாரம் : அருள் உடைமை
எண் : 250
வலியார் முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லும் இடத்து.
மு.வரதராசனார் உரை :
(அருள் இல்லாதவன்) தன்னைவிட மெலிந்தவர்மேல் துன்புறுத்தச் செல்லும்போது, தன்னைவிட வலியவரின் முன் தான் அஞ்சி நிற்கும் நிலைமையை நினைக்க வேண்டும்.
எண் : 250
வலியார் முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லும் இடத்து.
மு.வரதராசனார் உரை :
(அருள் இல்லாதவன்) தன்னைவிட மெலிந்தவர்மேல் துன்புறுத்தச் செல்லும்போது, தன்னைவிட வலியவரின் முன் தான் அஞ்சி நிற்கும் நிலைமையை நினைக்க வேண்டும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
அதிகாரம் : புலால் மறுத்தல்
எண் : 259
அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் , ஒன்றன்
உயிர் செகுத்து உண்ணாமை நன்று.
கலைஞர் உரை :
நெய் போன்ற பொருள்களைத் தீயிலிட்டு ஆயிரம் வேள்விகளை
நடத்துவதைவிட உண்பதற்காக ஓர் உயிரைப் போக்காமலிருப்பது நல்லது.
எண் : 259
அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் , ஒன்றன்
உயிர் செகுத்து உண்ணாமை நன்று.
கலைஞர் உரை :
நெய் போன்ற பொருள்களைத் தீயிலிட்டு ஆயிரம் வேள்விகளை
நடத்துவதைவிட உண்பதற்காக ஓர் உயிரைப் போக்காமலிருப்பது நல்லது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
அதிகாரம் : தவம்
எண் : 261
உற்ற நோய் நோன்றல் , உயிர்க்கு உறுகண் செய்யாமை,
அற்றே-தவத்திற்கு உரு.
மு.வரதராசனார் உரை :
தான் பெற்ற துன்பத்தைப் பொறுத்தலும் மற்ற உயிர்களுக்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகியவைகளே தவத்திற்கு வடிவமாகும்.
எண் : 261
உற்ற நோய் நோன்றல் , உயிர்க்கு உறுகண் செய்யாமை,
அற்றே-தவத்திற்கு உரு.
மு.வரதராசனார் உரை :
தான் பெற்ற துன்பத்தைப் பொறுத்தலும் மற்ற உயிர்களுக்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகியவைகளே தவத்திற்கு வடிவமாகும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
அதிகாரம் : கூடாவொழுக்கம்
எண் : 279
கணை கொடிது ; யாழ் கோடு செவ்விது; ஆங்கு அன்ன
வினைபடு பாலால் கொளல்.
மு.வரதராசனார் உரை :
நேராகத் தோன்றினும் அம்பு கொடியது ; வளைவுடன் தோன்றினாலும் யாழின் கொம்பு நன்மையானது; மக்களின் பண்புகளையும் செயல் வகையால் உணர்ந்து கொள்ள வேண்டும்.
எண் : 279
கணை கொடிது ; யாழ் கோடு செவ்விது; ஆங்கு அன்ன
வினைபடு பாலால் கொளல்.
மு.வரதராசனார் உரை :
நேராகத் தோன்றினும் அம்பு கொடியது ; வளைவுடன் தோன்றினாலும் யாழின் கொம்பு நன்மையானது; மக்களின் பண்புகளையும் செயல் வகையால் உணர்ந்து கொள்ள வேண்டும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
அதிகாரம் : வெகுளாமை
எண் : 304
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ , பிற.
மு.வரதராசனார் உரை :
முகமலர்ச்சியையும் அகமகிழ்ச்சியையும் கொல்கின்ற சினத்தைவிட ஒருவனுக்குப் பகையானவை வேறு உள்ளனவோ ?.
எண் : 304
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ , பிற.
மு.வரதராசனார் உரை :
முகமலர்ச்சியையும் அகமகிழ்ச்சியையும் கொல்கின்ற சினத்தைவிட ஒருவனுக்குப் பகையானவை வேறு உள்ளனவோ ?.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
அதிகாரம் : இன்னா செய்யாமை
எண் : 318
தன் உயிர்க்கு இன்னாமை தான் அறிவான் , என்கொலோ,
மன் உயிர்க்கு இன்னா செயல் ?.
கலைஞர் உரை :
பிறர் தரும் துன்பத்தால் தனக்கேற்படும் துன்பத்தை உணர்ந்தவன் அந்தத் துன்பத்தைப் பிற உயிர்களுக்குத் தரவும் கூடாதல்லவா?.
எண் : 318
தன் உயிர்க்கு இன்னாமை தான் அறிவான் , என்கொலோ,
மன் உயிர்க்கு இன்னா செயல் ?.
கலைஞர் உரை :
பிறர் தரும் துன்பத்தால் தனக்கேற்படும் துன்பத்தை உணர்ந்தவன் அந்தத் துன்பத்தைப் பிற உயிர்களுக்குத் தரவும் கூடாதல்லவா?.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
அதிகாரம் : நிலையாமை
எண் : 338
குடம்பை தனித்து ஒழியப் புள் பறந்தற்றே-
உடம்பொடு உயிரிடை நட்பு.
மு.வரதராசனார் உரை :
உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு , தான் இருந்த கூடு தனியே இருக்க அதைவிட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது.
எண் : 338
குடம்பை தனித்து ஒழியப் புள் பறந்தற்றே-
உடம்பொடு உயிரிடை நட்பு.
மு.வரதராசனார் உரை :
உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு , தான் இருந்த கூடு தனியே இருக்க அதைவிட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
அதிகாரம் : நிலையாமை
எண் : 339
உறங்குவது போலும் , சாக்காடு; உறங்கி
விழிப்பது போலும் , பிறப்பு
மு.வரதராசனார் உரை :
இறப்பு எனப்படுவது ஒருவனுக்கு உறக்கம் வருதலைப் போன்றது ; பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது.
எண் : 339
உறங்குவது போலும் , சாக்காடு; உறங்கி
விழிப்பது போலும் , பிறப்பு
மு.வரதராசனார் உரை :
இறப்பு எனப்படுவது ஒருவனுக்கு உறக்கம் வருதலைப் போன்றது ; பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
அதிகாரம் : துறவு
எண் : 341
யாதனின் யாதனின் நீங்கியான் , நோதல்
அதனின் அதனின் இலன்
மு.வரதராசனார் உரை :
ஒருவன் எந்தப் பொருளிலிருந்து , பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை.
எண் : 341
யாதனின் யாதனின் நீங்கியான் , நோதல்
அதனின் அதனின் இலன்
மு.வரதராசனார் உரை :
ஒருவன் எந்தப் பொருளிலிருந்து , பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
அதிகாரம் :
மெய் உணர்தல்
எண் : 355
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் , அப் பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
மு.வரதராசனார் உரை :
எப்பொருள் எத்தன்மையதாய்த் தோன்றினாலும் (அத் தோற்றத்தை மட்டும் கண்டு மயங்காமல்) அப்பொருளின் உண்மையான இயல்பை அறிவதே மெய்யுணர்வாகும்.
எண் : 355
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் , அப் பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
மு.வரதராசனார் உரை :
எப்பொருள் எத்தன்மையதாய்த் தோன்றினாலும் (அத் தோற்றத்தை மட்டும் கண்டு மயங்காமல்) அப்பொருளின் உண்மையான இயல்பை அறிவதே மெய்யுணர்வாகும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
எண் : 361
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்
மு.வரதராசனார் உரை :
ஊழைவிட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன ? ஊழை விலக்கும் பொருட்டு மற்றொரு வழியை ஆராய்ந்தாலும் அங்கும் தானே முன் வந்து நிற்கும்.
முற்றும் ..
No comments:
Post a Comment